Wednesday, December 18, 2013

ஜிகர்தண்டா – 3

கூட்டணி:



2014 லோக் சபாவுக்கான கருணாநிதி தேர்தல் நெருங்கும் வேலையில் தமிழ் நாட்டில் அணைத்து கட்சிகளும் விவாதிக்கும் விஷயம் கூட்டணி. இதில் முதல் ஆளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார், அதிலும் காங்கிரசஸ ஒரு படி மேலே போய் நம்ம்பிக்கை துரோகி என்று சொல்லிவிட்டார். என்னக்கேன்னோவோ கடைசியில் நம் ராமதாஸ் மாதிரி அது போன மாசம் என்று சொல்லிவிடுவாரோ என்று. பாஜகவும் காங்கிரஸ்ம் தமிழ் நாட்டில் மிகவும் எதிர் பார்க்கும் கூட்டணி, தேமுதிக. ஆனால் கேப்டனோ தன்னுடைய வாரிசை சினிமாவுக்கு தாரை வார்க்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக நான்கு மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேப்டன்  காங்கிரஸ் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார். சரி பாஜக என்று போனால் ஜெவும் மோடியும் நண்பர்கள் என்பதால் எந்த நேரத்தில் வேணுமானாலும் கூட்டணி அமையலாம். பார்ப்போம் இன்னும் நான்கு மாதத்தில் என்னென்ன காமெடி நடக்கிறதென்று!

மூடர் கூடம்:




மூன்று மாதர்த்திற்கு முன்பு ரிலிசான படம், அப்போது பார்க்க முயன்று நண்பர்கள் கம்பனி இல்லாததால் பார்க்க முடியாமல் போயிற்று. (பொதுவாக தனியாக தியட்டரில் படம்  பார்க்கும் பழக்கம் இல்லை). நேற்று தான் பார்க்க முடிந்தது. வாவ் ! சான்சே இல்லாத ரகம். நவீன் – தன்னுடைய தயாரிப்பு மற்றும் இயக்கம் என்றாலும் மற்றவர்களை தான் நிறைய முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். Black Humour என்று சொல்லபடுகிற காமெடி.. நிறைய இடத்தில வாய் விட்டு சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.. நவீனின் பின்புலமும் மிக சாதாரண ஒரு கதை. இந்த மாதிரி ஆட்கள் வெற்றி பெறுவதுதான் ஒரு தனி மனிதனின் உண்மையான வெற்றி. தூக்கி விட ஆள் இருந்தும் சறுக்கி சறுக்கி எழுபவர்கள் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

Wednesday, December 11, 2013

உணவகம் - ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் – வேளச்சேரி

வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே பாலத்திற்கு இந்த பக்கம் மஹிந்திரா கார் ஷோ ரூம் ஒட்டியுள்ளது. இன்னமும் ஈசியாக பழைய திண்டுக்கல் வேலு பிரியாணி இருந்த இடத்தில இருக்கிறது.

ஈரோடு பக்கம் மிகவும் பேமஸ் ஆன ஒன்று. கரூர் மற்றும் கோயம்புத்தூரில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் உள்ளதால் இந்த கடை வந்தவுடன் இங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துகொண்டேன். கடை திறந்து சில நாட்கள் தான் ஆகிறது. எனக்கு நேற்று இரவு தான் அங்கு சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த கடையில் மட்டன் சிறப்பு என்பதால் அதையே நான் விரும்பி சாப்பிட்டேன். உடன் வந்தவர்கள் ஏனோ சிக்கனோடு மல்லு கட்டவே விரும்பினார்கள். மட்டன் பிரியாணியின் சிறப்பே மற்ற கடைகள் போல் அல்லாமல் இங்கு மட்டனை சுக்கா போல் செய்து பரிமாறுகிறார்கள். மட்டன் பள்ளிபாளையம் சொல்ல தேவையில்லை, மிக அருமை. சிக்கனில் சிக்கன் அண்டா பிரை மிக வித்தியாசமாக இருந்தது, சிறு சிறு சிக்கன் பீசை முட்டையோடு பிரை செய்து கொடுக்கிறார்கள். ஸ்டார்ட்டர்ஸ் எனப்படிகிற ட்ரை அயிட்டம்ஸ் அளவில் கொஞ்சம் தான் இருக்கிறது. மற்ற படி விலை சிறிது அதிகம் என்றாலும் சுவைக்காக கொடுக்கலாம். ஐந்து பேர் சாபிட்டால் அதிக பட்சம் Rs.1400 ல் இருந்து Rs.1500 க்குள் வரும்.
                             மெனு கார்டு 
இதன் கிளைகள் சென்னையில் வேளச்சேரி தவிர்த்து தி.நகர், அண்ணாநகர் மற்றும் குரோம்பேட்டையிலும் உள்ளது. 
என்ன இன்னும் வேளச்சேரியில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தேய்த்தால் வேலு பிரியாணி என்றே வருகிறது.

ரேட்டிங்: பத்துக்கு எட்டு

Tuesday, December 3, 2013

சாந்தாராம் (SHANTHARAM) by Gregory David Robert


நாவல் – ஒருவரது வாசிப்பு ஆர்வத்துக்கு நாவல் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் அதனுடைய எழுத்து நடையை பொறுத்து நாம் மிக இயல்பாக கடந்து விடுவோம். என்னை பொருத்தவரை கதையின் போக்கில் நுழைந்தவுடன் என்ன வேலை இருந்தாலும் சதா அதே நினைப்பாகவே இருக்கும். அப்படி என்னை வாசிக்க வாய்த்த புத்தகங்கள் மிக அதிகம். இதெல்லாம் நான் இப்போது சொல்வதற்கு காரணம் ஒரு நாவல் “சாந்தாராம்” என்கிற ஆங்கில நாவல். 2008 லியே ஒரு நண்பனால் அறிமுக படுத்தப்பட்ட புத்தகம். அதனுடைய ௯௨௮ பக்கங்களை நினைத்து மலைத்து வைத்து விடுவேன். பிறகு 2012 ல் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிப்பதற்கு இப்பொழுதான் நேரம் கிடைத்தது. முக்கால்வாசி முடித்து விட்டேன். இன்னொருநாள் இதை பற்றிய விமர்சனத்தை பார்ப்போம். இப்பொழுது நான் இங்கு பகிர இருப்பது இதை வாசிக்க தூண்டிய புத்தகத்தின் பின்புலங்கள்.
இது ஒரு சுய சரிதை புத்தகம். சுய சரிதை என்றால் உடனே காந்தியின் நினைவு வருவது தவிர்க்க முடியாது ஆனால் இது adventure ரகம். கிரகோரி டேவிட் ராபர்ட் (Author: Gregory David Robert) என்பவரால் எழுதப்பட்டது. சாந்தாராம் எப்படிப்பட்ட புத்தகம் என்றால் ஹென்றி ஷாரியரின் சுய சரிதை புத்தகமான “Papillon”, கல்கியின் “பொன்னியின் செல்வன்”  போன்றது. இரண்டும் வேறுபட்ட தளம் என்றாலும் இதுவரை எவ்ளவோ புத்தகம் படித்திருந்தாலும் இதை என் நினைவில் இருந்து அகற்ற முடியாது. Papillon புத்தகத்தை தமிழில் கி.ரங்கராஜன் “பட்டாம்பூச்சி” என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்த்திருக்கிறார் என்று எளிதில் கடந்து விட முடியாது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நடந்த கதை தளத்தை நேரில் நின்று பார்க்கும் உணர்வை தரவல்லது. பொன்னியின் செல்வன் நான் சொல்லவே தேவை இல்லை. ஒவ்வொரு புத்தக திருவிலாவிலும்  மிக அதிக விற்பனை ஆகும் புத்தகம். இங்கு நான் கூறியிருக்கிற மூன்று புத்தகங்களுமே 1000 பக்கங்களை கொண்டது.

புத்தகத்தின் சாராம்சம் இதுதான், 1980 ல் ஆஸ்திரேலியா சிறையில் கொள்ளை வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா சிறை துறையினரால் மிக தேடப்படும் லிஸ்டில் இருந்தார். தப்பிய அவர் பல இடங்களில் சிதறி போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவின் மும்பைக்கு வந்த்ரங்கினார். மும்பையில் இவருடைய நிழல் உலகம், காதல், நட்பு ஆகியவை ஓர் திரில்லர் சினிமாவுக்குரிய அனைத்துமே இருக்கும். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை திரை வடிவமக்குவதற்கு ஹாலிவுட்டில் மிக பெரிய போட்டியே நடக்கிறது. இதில் நடிபத்ர்க்கு முதலில் ரசல் க்ரோவ் ஆர்வமாயிருந்தார் ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜானி டெப் தேர்வானார். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதன் காப்புரிமையை வாங்கி வைத்துள்ளது. இயக்குனருக்கு யார் யாரோ வந்து கடைசியில் நம் மீரா நாயர் தேர்வானார். கூடவே ஜானி டெப் உடன் நமது அமிதாப் பச்சனும் இணைந்தார். இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே போய் இன்னும் திரை வடிவமாகாமல் இருக்கிறது.  வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இதன் உரிமையை 2015 வரை நீடித்துள்ளது. ஜானி டெப் ம் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகி ஐவரும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக மாறி விட்டார். இவ்வளவு ஜாம்பவான்கள் இதில் ஆர்வமா இருக்கும் போதே உங்களக்கு தெரிந்திருக்கும் இந்த புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தை. எல்லா சர்வதேச எழுத்தாளர்களின் புத்தகங்களிலும் தவறாமல் இடம் பெரும் வாக்கியம் World’s Best Seller. ஆனால் இது உண்மையிலேயே World’s Best Seller.