Wednesday, December 18, 2013

ஜிகர்தண்டா – 3

கூட்டணி:



2014 லோக் சபாவுக்கான கருணாநிதி தேர்தல் நெருங்கும் வேலையில் தமிழ் நாட்டில் அணைத்து கட்சிகளும் விவாதிக்கும் விஷயம் கூட்டணி. இதில் முதல் ஆளாக பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார், அதிலும் காங்கிரசஸ ஒரு படி மேலே போய் நம்ம்பிக்கை துரோகி என்று சொல்லிவிட்டார். என்னக்கேன்னோவோ கடைசியில் நம் ராமதாஸ் மாதிரி அது போன மாசம் என்று சொல்லிவிடுவாரோ என்று. பாஜகவும் காங்கிரஸ்ம் தமிழ் நாட்டில் மிகவும் எதிர் பார்க்கும் கூட்டணி, தேமுதிக. ஆனால் கேப்டனோ தன்னுடைய வாரிசை சினிமாவுக்கு தாரை வார்க்க ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக நான்கு மாநில தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கேப்டன்  காங்கிரஸ் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார். சரி பாஜக என்று போனால் ஜெவும் மோடியும் நண்பர்கள் என்பதால் எந்த நேரத்தில் வேணுமானாலும் கூட்டணி அமையலாம். பார்ப்போம் இன்னும் நான்கு மாதத்தில் என்னென்ன காமெடி நடக்கிறதென்று!

மூடர் கூடம்:




மூன்று மாதர்த்திற்கு முன்பு ரிலிசான படம், அப்போது பார்க்க முயன்று நண்பர்கள் கம்பனி இல்லாததால் பார்க்க முடியாமல் போயிற்று. (பொதுவாக தனியாக தியட்டரில் படம்  பார்க்கும் பழக்கம் இல்லை). நேற்று தான் பார்க்க முடிந்தது. வாவ் ! சான்சே இல்லாத ரகம். நவீன் – தன்னுடைய தயாரிப்பு மற்றும் இயக்கம் என்றாலும் மற்றவர்களை தான் நிறைய முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். Black Humour என்று சொல்லபடுகிற காமெடி.. நிறைய இடத்தில வாய் விட்டு சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.. நவீனின் பின்புலமும் மிக சாதாரண ஒரு கதை. இந்த மாதிரி ஆட்கள் வெற்றி பெறுவதுதான் ஒரு தனி மனிதனின் உண்மையான வெற்றி. தூக்கி விட ஆள் இருந்தும் சறுக்கி சறுக்கி எழுபவர்கள் எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை. 

Wednesday, December 11, 2013

உணவகம் - ஜூனியர் குப்பண்ணா ஹோட்டல் – வேளச்சேரி

வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே பாலத்திற்கு இந்த பக்கம் மஹிந்திரா கார் ஷோ ரூம் ஒட்டியுள்ளது. இன்னமும் ஈசியாக பழைய திண்டுக்கல் வேலு பிரியாணி இருந்த இடத்தில இருக்கிறது.

ஈரோடு பக்கம் மிகவும் பேமஸ் ஆன ஒன்று. கரூர் மற்றும் கோயம்புத்தூரில் ஏற்கனவே சாப்பிட்ட அனுபவம் உள்ளதால் இந்த கடை வந்தவுடன் இங்கு சென்று சாப்பிட வேண்டும் என்று நினைத்துகொண்டேன். கடை திறந்து சில நாட்கள் தான் ஆகிறது. எனக்கு நேற்று இரவு தான் அங்கு சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்த கடையில் மட்டன் சிறப்பு என்பதால் அதையே நான் விரும்பி சாப்பிட்டேன். உடன் வந்தவர்கள் ஏனோ சிக்கனோடு மல்லு கட்டவே விரும்பினார்கள். மட்டன் பிரியாணியின் சிறப்பே மற்ற கடைகள் போல் அல்லாமல் இங்கு மட்டனை சுக்கா போல் செய்து பரிமாறுகிறார்கள். மட்டன் பள்ளிபாளையம் சொல்ல தேவையில்லை, மிக அருமை. சிக்கனில் சிக்கன் அண்டா பிரை மிக வித்தியாசமாக இருந்தது, சிறு சிறு சிக்கன் பீசை முட்டையோடு பிரை செய்து கொடுக்கிறார்கள். ஸ்டார்ட்டர்ஸ் எனப்படிகிற ட்ரை அயிட்டம்ஸ் அளவில் கொஞ்சம் தான் இருக்கிறது. மற்ற படி விலை சிறிது அதிகம் என்றாலும் சுவைக்காக கொடுக்கலாம். ஐந்து பேர் சாபிட்டால் அதிக பட்சம் Rs.1400 ல் இருந்து Rs.1500 க்குள் வரும்.
                             மெனு கார்டு 
இதன் கிளைகள் சென்னையில் வேளச்சேரி தவிர்த்து தி.நகர், அண்ணாநகர் மற்றும் குரோம்பேட்டையிலும் உள்ளது. 
என்ன இன்னும் வேளச்சேரியில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தேய்த்தால் வேலு பிரியாணி என்றே வருகிறது.

ரேட்டிங்: பத்துக்கு எட்டு

Tuesday, December 3, 2013

சாந்தாராம் (SHANTHARAM) by Gregory David Robert


நாவல் – ஒருவரது வாசிப்பு ஆர்வத்துக்கு நாவல் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் அதனுடைய எழுத்து நடையை பொறுத்து நாம் மிக இயல்பாக கடந்து விடுவோம். என்னை பொருத்தவரை கதையின் போக்கில் நுழைந்தவுடன் என்ன வேலை இருந்தாலும் சதா அதே நினைப்பாகவே இருக்கும். அப்படி என்னை வாசிக்க வாய்த்த புத்தகங்கள் மிக அதிகம். இதெல்லாம் நான் இப்போது சொல்வதற்கு காரணம் ஒரு நாவல் “சாந்தாராம்” என்கிற ஆங்கில நாவல். 2008 லியே ஒரு நண்பனால் அறிமுக படுத்தப்பட்ட புத்தகம். அதனுடைய ௯௨௮ பக்கங்களை நினைத்து மலைத்து வைத்து விடுவேன். பிறகு 2012 ல் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிப்பதற்கு இப்பொழுதான் நேரம் கிடைத்தது. முக்கால்வாசி முடித்து விட்டேன். இன்னொருநாள் இதை பற்றிய விமர்சனத்தை பார்ப்போம். இப்பொழுது நான் இங்கு பகிர இருப்பது இதை வாசிக்க தூண்டிய புத்தகத்தின் பின்புலங்கள்.
இது ஒரு சுய சரிதை புத்தகம். சுய சரிதை என்றால் உடனே காந்தியின் நினைவு வருவது தவிர்க்க முடியாது ஆனால் இது adventure ரகம். கிரகோரி டேவிட் ராபர்ட் (Author: Gregory David Robert) என்பவரால் எழுதப்பட்டது. சாந்தாராம் எப்படிப்பட்ட புத்தகம் என்றால் ஹென்றி ஷாரியரின் சுய சரிதை புத்தகமான “Papillon”, கல்கியின் “பொன்னியின் செல்வன்”  போன்றது. இரண்டும் வேறுபட்ட தளம் என்றாலும் இதுவரை எவ்ளவோ புத்தகம் படித்திருந்தாலும் இதை என் நினைவில் இருந்து அகற்ற முடியாது. Papillon புத்தகத்தை தமிழில் கி.ரங்கராஜன் “பட்டாம்பூச்சி” என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்த்திருக்கிறார் என்று எளிதில் கடந்து விட முடியாது, ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் நடந்த கதை தளத்தை நேரில் நின்று பார்க்கும் உணர்வை தரவல்லது. பொன்னியின் செல்வன் நான் சொல்லவே தேவை இல்லை. ஒவ்வொரு புத்தக திருவிலாவிலும்  மிக அதிக விற்பனை ஆகும் புத்தகம். இங்கு நான் கூறியிருக்கிற மூன்று புத்தகங்களுமே 1000 பக்கங்களை கொண்டது.

புத்தகத்தின் சாராம்சம் இதுதான், 1980 ல் ஆஸ்திரேலியா சிறையில் கொள்ளை வழக்குகளில் சிறை வைக்கப்பட்டு அங்கிருந்து தப்பி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியா சிறை துறையினரால் மிக தேடப்படும் லிஸ்டில் இருந்தார். தப்பிய அவர் பல இடங்களில் சிதறி போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவின் மும்பைக்கு வந்த்ரங்கினார். மும்பையில் இவருடைய நிழல் உலகம், காதல், நட்பு ஆகியவை ஓர் திரில்லர் சினிமாவுக்குரிய அனைத்துமே இருக்கும். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை திரை வடிவமக்குவதற்கு ஹாலிவுட்டில் மிக பெரிய போட்டியே நடக்கிறது. இதில் நடிபத்ர்க்கு முதலில் ரசல் க்ரோவ் ஆர்வமாயிருந்தார் ஆனால் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜானி டெப் தேர்வானார். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இதன் காப்புரிமையை வாங்கி வைத்துள்ளது. இயக்குனருக்கு யார் யாரோ வந்து கடைசியில் நம் மீரா நாயர் தேர்வானார். கூடவே ஜானி டெப் உடன் நமது அமிதாப் பச்சனும் இணைந்தார். இதோ அதோ என்று இழுத்துக்கொண்டே போய் இன்னும் திரை வடிவமாகாமல் இருக்கிறது.  வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இதன் உரிமையை 2015 வரை நீடித்துள்ளது. ஜானி டெப் ம் அவருடைய கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகி ஐவரும் இந்த படத்தின் ஒரு தயாரிப்பாளராக மாறி விட்டார். இவ்வளவு ஜாம்பவான்கள் இதில் ஆர்வமா இருக்கும் போதே உங்களக்கு தெரிந்திருக்கும் இந்த புத்தகத்தின் உலகளாவிய தாக்கத்தை. எல்லா சர்வதேச எழுத்தாளர்களின் புத்தகங்களிலும் தவறாமல் இடம் பெரும் வாக்கியம் World’s Best Seller. ஆனால் இது உண்மையிலேயே World’s Best Seller.

Tuesday, November 26, 2013

ஜிகதண்டா – 2

மின்சாரம்:
அதிமுக ஆட்சிக்கு வரும்பொழுது 4500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருந்ததாகவும் இப்பொழுது முழு கொள்ளளவான தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்து விட்டதாக சிறிது நாட்களுக்கு முன்பாக முதல்வர் அவர்கள் சட்ட சபையில் தெரிவித்து இருந்தார்கள். அவர்கள் சொன்ன நேரமோ என்னவோ தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிக மின்வெட்டு ஏற்படுகிறது. தற்பொழுது 2500 மெகாவாட் மின்சாரம் தேவைபடுவதாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த நேரத்தில் பிரதமர் சோனியாவிடம் கேட்டு அது தமிழகத்துக்குள் இப்போதைக்கு சுத்தமாக வராது என்று தான் தோன்றுகிறது.
மோடி:
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிகை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு அதிக ஓட்டு விழுந்து வருவதாகவும், இவரே சிறந்த நபராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் டைம் பத்திரிகை உலக அளவிலான தலைவர்களை வரிசைப்படுத்தி சிறந்த மனிதர் பட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு 2012 ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் யார் என 42 பேரை பட்டியலிட்டுள்ளது.
மோடி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து டைம் பத்திரிகை அளித்துள்ள விளக்கத்தில், சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி மோடி ஜனநாயகம் போற்றும் இந்தியாவில் காங்கிரஸ் அரசை அகற்ற இந்தியர்கள் பலரும் விரும்பும் நபராக உள்ளார் என்று கூறியுள்ளது. அதிகம் செய்திகளில் பாராட்டப்பட்டவராகவும், தூற்றப்பட்டவராகவும் பேசப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.
மினிபஸ்:
மினி பஸ்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், சொத்துகளில், அ.தி.மு.க., சின்னமான, "இரட்டை இலை'யை வடிவமைத்துள்ளனர். ஒரு கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்த, பொதுமக்கள் பணத்தை பயன்படுத்தக் கூடாது. எனவே, அரசு நிறுவனங்கள், சொத்துகளில், "இரட்டை இலை'யை பொறிக்க, தடை விதிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ள எதிர்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் பின் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெரிய இலைகளில், தனியாக தண்டு இருக்கும். நான்கு இலைகளிலும், நரம்புகள் இருக்காது. லேசான மற்றும் அடர்த்தியான, பச்சை நிறத்தில், நான்கு இலைகள் உள்ளன.எனவே, "இரட்டை இலை' சின்னத்தையும், பஸ்களில் வரையப்பட்டுள்ள, நான்கு இலைகளையும் ஒன்றாக பாவிக்க முடியாது. தமிழகம் முழுவதும், 610 மினி பஸ்களை இயக்க போவதாக, மனுவில் கூறப்பட்டு உள்ளது. தற்போதைக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை. எந்த அடிப்படையும் இல்லாமல், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. யூகத்தின் அடிப்படையில், கூறப்பட்டுள்ளன. மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இரண்டாம் உலகம்:
இணைய விமர்சனத்தை நோண்டினால் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள், இரண்டு மாதர்திர்க்கு முன்பு வரை ஒரு படம் பார்க்க நினைத்தால் உடனடியாக பார்த்து விடுவேன். ஆனால் இப்பொழுதெல்லாம் தியட்டருக்கு செல்லவே பயமாக இருக்கிறது. அதுவும் அவர்களுடைய பார்கிங் மற்றும் காண்டீன் விலை டிக்கெட் விலையை விட அதிகமாக இருக்கிறது. இதற்கு மேல் ஆன்லைனில் புக் செய்தால் ரூ.120 உடன் மேற்கொண்டு ஒரு 50 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வரும் படங்களும் படு மொக்கையாக இருப்பதால் நமது Rs.200 தப்பித்தது என்று வேண்டி கொள்வேன். இப்பொழுதெல்லாம் முப்பது படங்களில் ஒரு நல்ல படத்தை பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது. மார்க்கெட்டிங் பண்ணினால் எந்த படத்தையும் ஒட்டி விடலாம் என்ற தவறான எண்ணம் திரைதுரையினரிடம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் நிலைமை ரஜினி படமே (குசேலன்) என்றாலும் நிலைமை இதுதான்.    
ஆச்சர்யம்:    
விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ          




                           

Wednesday, November 20, 2013

ஜிகர்தண்டா – 1

மழை:
சென்னை அருகே இன்று ஹெலன் புயல் தாக்கும்னு ரமணன் சொல்லியிருக்காரு பார்ப்போம். ஆனால் பெரும்பான்மையான மழை தென் மாவட்டத்தில் பெய்யும்னு வேறு சொல்லியிருக்காரு. இந்த வருஷம் மழை பொய்த்தால் அடுத்த வருடம் அனைவருக்கும் டண்டநக்காதான். ஒரு டவுட்? நல்லவங்க இந்த நாட்டில் இருகிரதால்தான் மழை பெய்யுதுன்னு சொல்றானே ஒருத்தன் அவன் நல்லவனா? கெட்டவனா? (எங்கோ படித்து)
ATM:
நேற்று பெங்களூரில் நடந்த ATM கொள்ளை அதுவும் காலையில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஷுட்ட்டர் ஐ மூடி அந்த பெண்மணியை அரிவாளால் வெட்டி வெறும் பத்து பதினைந்தாயிரம் ரூபைய்க்க்காக, அதுவும் அந்த பெண்மணியின் குடும்பத்தை நினைக்கும் போது வருந்தாமல் இருக்க முடியவில்லை.  என்ன நம் நாட்டில் கொலை என்பது பேசன் ஆகி விட்டது. காவல் துறையும் பல முறை சொல்லிவிட்டது கண்டிப்பாக CCTV மற்றும் காவலாளி இருக்க வேண்டும். காவலாளி என்றல் திடகாத்திரமான ஆள் வயதான ஆள் இல்லை. ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாமல் இருக்கிறது.
விவாதம்:
தினமும் எல்லா செய்தி சேனல்களிலும் தவறாமல் இடம்பெறுவது விவாத நிகழ்ச்சி.   இதனால் மக்களுக்கு எதாவது உதவுகிறதா? இல்லை இதை சேனல் வேறு வகைகளில் மக்களுக்கு தெரியபடுதுகிறதா? தெரியவில்லை. இல்லை மக்கள் ரசனைகேற்றவரு தர மாட்டேங்கிறதா?
காமெடி சேனல்:
தமிழ் நாட்டில் பெருமாலான இளவயதினரின் விருப்ப சேனல் விஜய் டிவி அல்லது காமெடி சானல்களாகிய ஆதித்யா மற்றும் சிரிப்பொலி. குறிப்பாக ஆதித்யா சேனலின் நிகழ்ச்சிகளாகிய சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் கொஞ்சம் நடிங்க பாஸ் மிகவும் அருமை. இன்றைய போட்டி உலகில் சான்ஸ் கிடப்பது என்பது குதறி கொம்பு அதிலும் தனித்துவமான நிகழ்சிகள் தருவது அதை விட கடிது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியையும் தாண்டி அடுத்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி வருவது நிச்சயம்.

மருத்துவமனை கொள்ளைகள்:

இதை பற்றி மிக அதிகமானோர் கூறியிருந்தாலும் இந்த மருத்துவ காப்பிடு கொள்ளை மிகவும் கொடியது, மிகவும் கொடியது. ஐம்பதாயிரம் லிமிட் என்றால் மிக அழகாக மேட்ச் செய்து இன்சூரன்ஸ் கம்பெனி இடம் இருந்து வாங்கி விடுகிறார்கள், அதோடு விட்டால் பரவாயில்லை மேற்கொண்டு அதே அளவு தொகையையும் நம்மிடம் இருந்து புடிங்கி கொள்கிறார்கள். இதுதான் இப்பொழுது மிகவும் லாபகரமான தொழில். அதனால் தான் பல பேர் தன் மகன்/மகள் மார்க் குறைவாக எடுத்திருந்தாலும் கோடிகளை கொட்டி மருத்துவ படிப்பில் சேர்க்கிறார்கள்.

Monday, October 28, 2013

who Moved My Cheese? (A book review)



நான் MBA சேர்ந்த பிறகுதான் ஆங்கில புத்தகங்களை ரெகுலராக படிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பு அதிக பட்சம் நான்கைந்து புத்தகங்கள் படித்திருப்பேன். MBA சேர்ந்தவுடன் என்னுடைய கல்லூரியில் முதன் முதலாக படிக்க சொன்ன management புத்தகம் who Moved My Cheese? மொத்தமே 96 பக்கங்கள் உடையது. வாசிக்க ஆரம்பித்தால் அதிக பட்சம் இரண்டு மணி நேரம் ஆகலாம். ஆனால் இது அப்படிப்பட்ட புத்தகம் அல்ல. நிறுத்தி நிதானமாக வாசிக்க வேண்டிய புத்தகம். 1990இல் வெளியான இந்த புத்தகம் தொடர்ந்து பல வருடங்களாக 24/7 வேலை செய்தும் டிமாண்டை மீட் பண்ண முடியவில்லை. இதை கதை வடிவில் மிக அழகாக சொல்லியிப்பார் இதனுடைய ஆசிரியர் ஸ்பென்சர் ஜான்சன். ஒருவருடைய இருப்பிடத்தையும், உணவை தேடும் முறையையும் பொருத்து அவர்களுடைய வெற்றியையும் சந்தோசத்தையும் சொல்லும் கதை. கதை இதுதான், இரண்டு எலிகள் sniff அண்ட் scurry ஒரு குரூப்  மேலும் இரண்டு மிகசிறிய மனிதர்கள் ஹெம் அண்ட் ஹா மற்றொரு குரூப்.. அனைவரும் வெண்ணையை தேடிக்கொண்டு வலையில் வாழ்கிறார்கள்.  முதலில் இரண்டு குரூப் ம் சேர்ந்து “ cheese Station C” கண்டுபிடிக்கிறார்கள். அது முதல் அவை அவர்கள் உணவாகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டாவது குரூப் நாங்கள் அனைத்தயும் உண்போம் என்கிற மனப்போக்கிற்கு வந்து மிக காட்டமாக நடந்து கொள்கின்றன. ஆனால்  sniff அண்ட் scurry எதிர் கால வாழ்க்கைக்கு தேவையான உணவை சேமிக்க சென்று “ cheese Station N” கண்டுபிடிகின்றன. ஆனால் ஹெம் அண்ட் ஹா எதையும் தேடாமல் அதையே சாப்பிட்டு வாழ்ந்து தீர்ந்து போன பின் பசிக்கு  மிகவும் கஷ்டப்டிகிரார்கள். ஒரு நிலையில் ஹா தனடுடைய நிலையை உணர்ந்து நான் நம் உணவை தேடி வேறு இடம் போக வேண்டும் என்று ஹெம் இடம் சொல்கிறது. ஆனால் ஹெம் தினமும் அதே இடத்திற்கு சென்று ஏதாவது சாப்பாட்டிற்கு தேறுமா என்று பார்க்கிறது. ஆனால் அதே நிலை தான் நீடிக்கிறது. ஒரு நாள் ஹா ஹெம்ற்கு தெரியும்படி சுவற்றில் “ நீ மாறவில்லை என்றால் இவ்வுலகில் இருக்க மாட்டாய் என்று எழுதிவிட்டு உணவை தேடி செல்கிறது. தேடிச்சென்று “ cheese Station N” கண்டுபிடிக்கிறது. அங்குள்ள சுவற்றில் இவ்வாறு எழுதி வைக்கிறது,
Change Happens
They Keep Moving The Cheese
Anticipate Change
Get Ready For The Cheese To Move
Monitor Change
Smell The Cheese Often So You Know When It Is Getting Old
Adapt To Change Quickly
The Quicker You Let Go Of Old Cheese, The Sooner You Can Enjoy New Cheese
Change
Move With The Cheese
Enjoy Change!
Savor The Adventure And Enjoy The Taste Of New Cheese!
Be Ready To Change Quickly And Enjoy It Again
They Keep Moving The Cheese.




ஓபாமாவின் இந்திய ஆசை!!!!

நான் அலுவல் விஷயமாக அமெரிக்கா சென்றிருந்த போது எனக்கு வெள்ளை மாளிகையில் இருந்து போன். நீங்கள் எப்பொழுது ப்ரீயாக இருப்பீர்கள், உங்களை அமெரிக்க அதிபர் உடனே பார்க்க வேண்டுமென நினைக்கிறார். ஒரே குழப்பத்துடன் அவரை பார்த்தபோது மிகவும் தெரிந்தவர் போல் வரவேற்றார். குழம்பாதிர்கள், நீங்கள் இப்பொழுது தான் எழுத்து துறைக்கு வந்துரிக்கிர்கள் என்று கேள்விப்பட்டு அடுத்தவர்கள் உங்களை எதாவது கட்சியில் சேர்க்கும் முன்பு நான்  என்னுடைய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று உங்களை கூப்பிட்டேன். ஒபாமா சொன்னது, நான் என்டுடைய  கட்சியை உடனடியாக இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் தொடங்க வேண்டும். ஏனென்றால் என்னுடைய பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடும். பிறகு என்னால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. ஓ அதற்கு என்ன உங்களை தமிழகத்தில் வழி நடத்துவது என்னுடைய பொறுப்பு. அம்மாவுக்கு ஒரு சோ போல, விஜயகாந்துக்கு ஒரு பிரேமலதா போல. இனி எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நடந்த உரையாடல்.
ஒபாமா: எப்பொழுது எங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
நான்: எப்பொழுது வேண்டுமானாலும் ஆனால் கூட்டம் மதுரையில் தான் நடக்க வேண்டும். ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.    
ஒ: சரி, கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்
நா: எதை வேண்டுமானாலும் வையுங்கள், ஆனால் முடிவது திராவிட முன்னேற்ற கழகம் என்று இருக்க வேண்டும்.  ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.   
ஒ: யாரையெல்லாம் கட்சியில் எடுக்க வேண்டும்.
நா: சினிமா நடிகர்கள், மார்க்கெட் இழந்த பழைய குண்டான நடிகை, சிரிப்பே வரவழைக்க தெரியாத சிரிப்பு நடிகர், இன்னோவா கார் தருகிறேன் என்று சொன்னவுடன் எதிர் முகாமிலிருந்து வரும் அரசியல் பிரமுகர் இவர்களைப்போல் மாறும் சிலர்.
ஒ: oh I see, இந்த எழுத்தாளர்கள், சமுக ஆர்வலர்கள் இவர்கள் எல்லாம் தேவை இல்லையா???
நா: தேவையே இல்லை, ஏனென்றால் இவர்கள் மிக தெளிவாக உண்மையை மட்டுமே பேசுபவர்கள். இவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம் தேசத்தில் புரட்சி என்பது கல்யாண் jewellers விளம்பரத்தில் பிரபு செய்வதாகும். நடிகன் நூறு பேரை சினிமாவில் அடிப்பான் ஆனால் நேரில்     ம்ஹூம் ஒரு ஹேர் கூட....
ஒ: ஓஹோ, வாக்காளனின் மனநிலை எப்படி தமிழ் நாட்டில் இருக்கிறது.
நா: இதற்கு சற்று விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும்
வெற்றி பெற்ற பிறகு ஆட்சியாளர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் தேர்தல் நேரத்தில் என்னக்கு ஓட்டளிக்க பணம் வேண்டும், யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம்.
இதோடு சேர்த்து மது, பிரியாணி குடுத்தால் கூடுதல் ஓட்டு விழும்.
ஒவ்வொரு ஏரியாவிலும் டாஸ்மாக் திறக்க மனதிற்குள் நினைப்போம் முக்கியமாக கூலிங் பீர் ஆனால் வெளியில் நல்லவன் போல் காட்டிக் கொள்வோம்.
வேலை செய்து கொண்டே வேலை இல்லாதோர் அரசு உதவி தொகையை வாங்கி கொள்வோம்
நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்யாமலே நூறு ரூபாய் வாங்கி கொள்வோம்.
.
.
.
.
மது விலக்கு போராட்டத்துக்கு அரசியல் தலைவர் போதையோடு தான் வருவார், கண்டு கொள்ள கூடாது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்தாலும் வாய்தா அது இது என்று வாழ்நாளை ஓட்டி விடுவார்கள்
ஓ: (மூர்சையாகிறார்).....
நா: சார்... சார்...
ஒ: .......
நா: தலை தெறிக்க ஓடுகிறார்..   
நான் அலுவல் விஷயமாக அமெரிக்கா சென்றிருந்த போது எனக்கு வெள்ளை மாளிகையில் இருந்து போன். நீங்கள் எப்பொழுது ப்ரீயாக இருப்பீர்கள், உங்களை அமெரிக்க அதிபர் உடனே பார்க்க வேண்டுமென நினைக்கிறார். ஒரே குழப்பத்துடன் அவரை பார்த்தபோது மிகவும் தெரிந்தவர் போல் வரவேற்றார். குழம்பாதிர்கள், நீங்கள் இப்பொழுது தான் எழுத்து துறைக்கு வந்துரிக்கிர்கள் என்று கேள்விப்பட்டு அடுத்தவர்கள் உங்களை எதாவது கட்சியில் சேர்க்கும் முன்பு நான்  என்னுடைய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று உங்களை கூப்பிட்டேன். ஒபாமா சொன்னது, நான் என்டுடைய  கட்சியை உடனடியாக இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் தொடங்க வேண்டும். ஏனென்றால் என்னுடைய பதவிக்காலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிந்து விடும். பிறகு என்னால் இங்கு ஆட்சிக்கு வர முடியாது. ஓ அதற்கு என்ன உங்களை தமிழகத்தில் வழி நடத்துவது என்னுடைய பொறுப்பு. அம்மாவுக்கு ஒரு சோ போல, விஜயகாந்துக்கு ஒரு பிரேமலதா போல. இனி எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நடந்த உரையாடல்.
ஒபாமா: எப்பொழுது எங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
நான்: எப்பொழுது வேண்டுமானாலும் ஆனால் கூட்டம் மதுரையில் தான் நடக்க வேண்டும். ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.    
ஒ: சரி, கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்
நா: எதை வேண்டுமானாலும் வையுங்கள், ஆனால் முடிவது திராவிட முன்னேற்ற கழகம் என்று இருக்க வேண்டும்.  ஏன் என்று கேட்க கூடாது, பதில் தெரியாது ஆனால்  அது ஒரு செண்டிமெண்ட்.   
ஒ: யாரையெல்லாம் கட்சியில் எடுக்க வேண்டும்.
நா: சினிமா நடிகர்கள், மார்க்கெட் இழந்த பழைய குண்டான நடிகை, சிரிப்பே வரவழைக்க தெரியாத சிரிப்பு நடிகர், இன்னோவா கார் தருகிறேன் என்று சொன்னவுடன் எதிர் முகாமிலிருந்து வரும் அரசியல் பிரமுகர் இவர்களைப்போல் மாறும் சிலர்.
ஒ: oh I see, இந்த எழுத்தாளர்கள், சமுக ஆர்வலர்கள் இவர்கள் எல்லாம் தேவை இல்லையா???
நா: தேவையே இல்லை, ஏனென்றால் இவர்கள் மிக தெளிவாக உண்மையை மட்டுமே பேசுபவர்கள். இவர்களால் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. எம் தேசத்தில் புரட்சி என்பது கல்யாண் jewellers விளம்பரத்தில் பிரபு செய்வதாகும். நடிகன் நூறு பேரை சினிமாவில் அடிப்பான் ஆனால் நேரில்     ம்ஹூம் ஒரு ஹேர் கூட....
ஒ: ஓஹோ, வாக்காளனின் மனநிலை எப்படி தமிழ் நாட்டில் இருக்கிறது.
நா: இதற்கு சற்று விரிவாக உங்களுக்கு விளக்க வேண்டும்
வெற்றி பெற்ற பிறகு ஆட்சியாளர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ஆனால் தேர்தல் நேரத்தில் என்னக்கு ஓட்டளிக்க பணம் வேண்டும், யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம்.
இதோடு சேர்த்து மது, பிரியாணி குடுத்தால் கூடுதல் ஓட்டு விழும்.
ஒவ்வொரு ஏரியாவிலும் டாஸ்மாக் திறக்க மனதிற்குள் நினைப்போம் முக்கியமாக கூலிங் பீர் ஆனால் வெளியில் நல்லவன் போல் காட்டிக் கொள்வோம்.
வேலை செய்து கொண்டே வேலை இல்லாதோர் அரசு உதவி தொகையை வாங்கி கொள்வோம்
நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து வேலை செய்யாமலே நூறு ரூபாய் வாங்கி கொள்வோம்.
.
.
.
.
மது விலக்கு போராட்டத்துக்கு அரசியல் தலைவர் போதையோடு தான் வருவார், கண்டு கொள்ள கூடாது.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்தாலும் வாய்தா அது இது என்று வாழ்நாளை ஓட்டி விடுவார்கள்
ஓ: (மூர்சையாகிறார்).....
நா: சார்... சார்...
ஒ: .......
நா: தலை தெறிக்க ஓடுகிறார்..       
    

Friday, March 8, 2013

ஆபீஸ்


ஆபீஸ் 

இன்றைய நிலையில் ஆபீஸ் அல்லது டி ஆபீஸ் என்றால் அதன் அலுவலகம் எவ்வாறு இர்ருக்கும் என்று படித்த எல்லாருக்குமே தெரியும். அதிலும்  டி ஆபீஸ் அமைப்பு அதன் முறை இவைஎல்லாம் எப்படி இருக்குமென்று நன்றாகவே தெரியும். நான்  டி யில் வேலை பார்க்கும் பொது அது பிடிக்காமல் விலகி வேறு துறையை தேர்ந்தெடுத்தேன்
·         அதற்கு காரணம் 8 மணி நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
·         மேலாளர் எப்பொழுதும் கண்கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருப்பார். ( பொதுவாக சிறு டீம் ஆக  இருந்தால்
·         ப்ரீயாக ஒருவருடுன் ஒருவர் மிகவும் கவனமுடன் பேச வேண்டும் 
·         நம்முடைய status மைண்டைன் பண்ண நிறைய செலவு பண்ண வேண்டும் 
·         நமக்கென்று தனித்துவம் என்பது பெரும்பாலும் கேள்விக்குறியே?
·         மிக நீண்ட நேரம் ஆபீசில் இருக்க வேண்டும் 
·         அதுவும் ப்ராஜெக்ட் முடிவில் நாள் கணக்கில் ஏன் மத கணக்கில் கூட விடாமல் வேலை செய்ய வேண்டும் 

மேலே சொன்னவை நான் அறிந்த சில காரணங்கள். இவை என்னுடைய ஆரம்ப நாட்களில் நடந்தவை. அதன் பிறகு I T   அல்லாத பல கம்பெனிகள் மாறி வந்து விட்டேன்.


இப்பொழுது IT துறை பற்றி என்னுள் எழும் சில கேள்விகள். இதற்கு பல பேரிடம் பதில்கள் இருக்கும். இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
இவை ஆனதும் அனைவருக்குமே பொருந்தும் என்று அவசியமில்லை

·         தேவையில்லாத கோபம் -  கம்ப்யூட்டர் துறையில் சேர்ந்த பிறகு அவர்களுடைய குணத்தில் மாற்றான். மிக முக்கியமாக தேவியில்லாம் கோபப்படுவது, பெரும்பாலும் வீட்டில்
·         வரவு - செலவு : வருமானத்திற்கும் செலவிற்கும் சமமானம் உள்ளதா? இது இப்பொழுது அனைவரிடமும் உள்ளதென்றாலும் முக்கியமாக இத்துறையில். எனக்கு தெரிந்த என்னுடைய நண்பர் மற்றும் அவர் மனைவி இருவரும் டி வேலைக்கும் செல்பர்கள், மாதம் ரூ.60,000 க்கு மேல் சம்பாதிப்பவர்கள். அனால் மாதக் கடைசியில் அவருகளுடைய சேமிப்பு வெறும் ரூ.5,000. வேறு எந்த EMI அல்லது கடன் இல்லை. இவர்களுடைய செலவு மட்டுமே
·         பெற்றோர் - பெரும்பாலான பெற்றோர் விவசாயமோ அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செயதவர்களகதான் இருப்பர். ஆகவே எப்படி இவர்களால் இப்படி வரவுக்கு மீறி செலவு செய்ய முடிகிறது.(நம்முடைய நாடு தனிநபர் சேமிப்பு மிகுந்த நாடு, ஏன் மேற்கத்திய நாடுகளில் தனி நபர் வீழ்கிறார் என்றால் அதற்கு காரணம் வரவை  விட  செலவு  மிக அதிகம் இருப்பதால். நமது படித்த இளைஞர்கள்  இது தெரிந்தும் இதை தொடர்கிறார்கள்.
     பெற்றோர்களுடைய எண்ணம் இந்த விஷயத்தில் எவ்வாறு       இருக்கிறது.
·         பேரம் : இவர்களிடம் பெரும்பாலும் பேரம் பேசும் தன்மை மிக குறைவாகவே இருக்கிறது
·         பொறுமை & நேரமின்மை: எதையும் மிக வேகமாக செய்ய வேண்டும். அதவும் விடுமுறை நாட்களில் கூட இது தொடர்கிறது.
·         வெளி உலகம் : ஒருவேளை கம்பனியிலிருந்து  தூக்கப்பட்டால் அவர்களுடைய நிலை? 5 அல்லது 10 வருட அனுபவக்காரர்கள் என்ன செய்வார்கள்