Friday, October 8, 2010

இன்சூரன்ஸ்

இனி ஒரு நிதி செய்வோம்’ என்ற நாணய விகடன் பகுதியை படித்தேன். அதில் கூறப்பட்ட வாக்கியமே இது ’இன்சூரன்ஸ் என்பது முதலீட்டுக்கான வழி அல்ல". நாம் நிறைய பேர் தவறாக புரிந்து கொண்ட விசயம் இதுதான்.




இன்சூரன்ஸில் இரு முக்கிய பாலிசிகள் உள்ளது. ஒன்று என்டோவ்மென்ட பாலிஸி மற்றும் டேர்ம் பாலிஸி ஆகும். சரி, அவற்றின் வித்தியாசம் என்ன என்று பார்ப்போம். எண்டோவ்மென்ட் பாலிஸியோ டேர்ம் பாலிஸியோ எதுவாக இருந்தாலும் பாலிஸி காலம் முழுவதும் நாம் பணம் செலுத்துகிறோம். எண்டோவ்மென்ட் பாலிஸியைப் பொறுத்தவரை பாலிசி காலம் முடிந்த பிறகு பாலிசி தொகையும் கொஞசம் போனசும் கிடைக்கும். ஆனால் டேர்ம் பாலிசியில் அசம்பாவிதம் நேராத வதையில் எந்தப் பணமும் கிடைக்காது.



’எந்தப் பணமும் கிடைக்காது’ என்ற ஒரே காரணத்தால்தான் யாரும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க விரும்புவதில்லை. இது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறை. ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.



30 வயது நபர் 5 லட்சம் ரூபாய்க்கு எண்டோவ்மென்ட பிளான் எடுக்கிறார். இதற்காக வருடத்துக்கு கிட்டதட்ட 21,000 ரூபாய் (25 ஆண்டுகளுக்கு) அவர் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் 30 வயது நபர் 5 லட்சம் டேர்ம் பாலிசி எடுத்தால் வருடத்துக்கு 2000 ரூபாய்க்கு குறைவாகவே (25 ஆண்டுகளுக்கு) செலுத்தினால் போதுமானது. இதன் மூலம வருடா வருடம் மீதமாகும் 19,000 ரூபாயை வேறு முதலீட்களில் போட்டு வருமானம் பார்க்கலாம்.



சுமாராக 8 சதவிகிதம் வருமானம் என்றால் கூட, 25 வருடத்துக்குப் பிறகு 13 லட்ச ரூபாய் கிடைக்கும்! அதுவே 10 சதவிகிதம் வருமானம் என்றால் 18 லட்சம் கிடைக்கும். ஆனால் எண்டோவ்மென்ட் பாலிசி போட்டிருந்தால் முதிர்வுத் தொகையான ஐந்து லட்சம் பளஸ் போனஸாக 5 லட்சம் கிடைக்கும் 10 சதவிகிதம் வருமானம் என்றால் 6 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் 10 சதவிகிதம் கிடைக்குமா என்பது சந்தேகமே !). என கிட்டதட்ட பத்து லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். எனவே நாம் முதலீட்டாக ஒதுக்கும் தொகையை டேர்ம் இன்சூரன்ஸில் கொஞ்சமும் மற்ற முதலீடுகளிலுமாக பிரித்துப் போடும்போது, ரிஸ்க் கவரும் கிடைக்கிறது. நமது முதலீடும் பெருகுகிறது,

No comments:

Post a Comment